Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 2, Verse 50

பு1த்3தி4யுக்1தோ1 ஜஹாதீ1ஹ உபே4 ஸுக்1ருத1து3ஷ்க்1ருதே1 |

1ஸ்மாத்1யோகா3ய யுஜ்யஸ்வ யோக3: க1ர்மஸு கௌ1ஶலம் ||50||

புத்தி-யுக்தஹ—--ஞானம் கூடியவர்; ஜஹாதி— --அதிலிருந்து விடுபடுகிறார்; இஹ—--இந்த வாழ்க்கையில்; உபே—-- இரண்டும்; ஸுக்ருத--துஷ்க்ருதே—--நல்ல மற்றும் கெட்ட செயல்களிலிருந்து; தஸ்மாத்—--எனவே; யோகாய---யோகத்திற்காக; யுஜ்யஸ்வ—--முயற்சி செய்; யோகஹ—--யோகம் ; கர்மஸு-கௌஶலம்—--திறமையாக வேலை செய்யும் கலை.

Translation

BG 2.50: பற்றின்றி வேலை செய்யும் அறிவியலை விவேகத்துடன் கடைப்பிடிப்பவர், இந்த ஜன்மத்திலேயே நல்ல மற்றும் கெட்ட வினை‘களில் இருந்து விடுபடலாம். எனவே, திறமையாக (சரியான உணர்வில்) வேலை செய்யும் கலையான யோகத்திற்காக பாடுபடுங்கள்.

Commentary

கர்ம யோகத்தின் அறிவியலைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு, மக்கள் பெரும்பாலும் பலன்களின் மீதான பற்றுதலைக் கைவிட்டால், அவர்களின் செயல்திறன் குறையுமா? ஸ்ரீ கிருஷ்ணர், தனிப்பட்ட உந்துதல் இல்லாமல் வேலை செய்வது நமது வேலையின் தரத்தைக் குறைக்காது, மாறாக, நாம் முன்பை விட மிகவும் திறமையானவர்களாக மாறுகிறோம் என்று விளக்குகிறார்.

அறுவை சிகிச்சை செய்யும் போது மக்களை கத்தியால் அறுக்கும் நேர்மையான அறுவை சிகிச்சை நிபுணரின் உதாரணத்தைக் கவனியுங்கள். நோயாளி உயிர் பிழைத்தாலும் இறந்தாலும் உலையாமல் அவர் தனது கடமையை உள்ளச் சமநிலையுடன் செய்கிறார். ஏனென்றால், அவர் தன்னலமின்றி, தனது திறமைக்கு ஏற்றவாறு, மேலும் முடிவுகளுடன் இணைக்கப்படாமல் அவர் தனது கடமையை செய்கிறார். எனவே, அறுவை சிகிச்சையின் போது நோயாளி இறந்தாலும், அறுவை சிகிச்சை நிபுணருக்கு கொலை குற்ற உணர்வு ஏற்படாது. இருப்பினும், அதே அறுவை சிகிச்சை நிபுணரின் ஒரே குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், அவருக்கு அதை செய்ய மனத்துணிவு இல்லை. தன் குழந்தையின் நலனில் உள்ள பற்றுதல் காரணமாக அவர் தான் அறுவை சிகிச்சையை திறமையாக செய்யமுடியாது என்று எண்ணி பயந்து மற்றொரு அறுவை சிகிச்சை நிபுணரின் உதவியை நாடுகிறார். முடிவுகளுடனான பற்றுதல் நம்மை மிகவும் திறமையானவர்களாக மாற்றாது என்பதை இது காட்டுகிறது; மாறாக, இணைப்பு நமது செயல்திறனை சாதகமற்ற விதத்தில் பாதிக்கிறது. அதற்குப் பதிலாக, நாம் பற்றுதல் இல்லாமல் வேலை செய்தால் நடுக்கம், பயம், பதற்றம் அல்லது. உணர்ச்சி வசப்படாமல், நமது அதிகபட்ச திறன் மட்டத்தில் செயல்களைச் செய்யலாம்.

அதேபோல், அர்ஜுனனின் தனிப்பட்ட உதாரணம், பலன்களின் மீதான பற்றுதலை கைவிடுவது செயல்திறனை கடுமையாக பாதிக்காது என்பதை விளக்குகிறது. பகவத் கீதையைக் கேட்பதற்கு முன், அவர் ஒரு ராஜ்யத்தை வெல்லும் ஆசையுடன் போரில் ஈடுபட எண்ணினார். பகவத் கீதையைக் கேட்டபின், போரிடுவது தனது கடமை மற்றும் அதனால் ஸ்ரீ கிருஷ்ணர் மகிழ்ச்சி அடைவார் என்பதற்காக போராடினார். இன்னும் போர் வீரராகவே இருந்த அவருடைய உள் உந்துதல் மாறிவிட்டது. பற்றுதல் இல்லாமல் தன் கடமையைச் செய்ததால் அர்ஜுனன் முன்பைவிட எந்தவிதத்திலும் தகுதி குறைந்தவர் ஆகவில்லை. மாறாக, அவர் அதிக உத்வேகத்துடன் போராடினார், ஏனெனில், அவரது செயல் நேரடியாக கடவுளின் சேவையில் அர்ப்பணிக்கப்பட்டது.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
2. ஸாங்கிய யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!